Glocal Fair 2024

புடழஉயட குயசை 2022 நிகழ்ச்சித் திட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி!

தென்மகாணத்தில் அமைந்துள்ள காலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்து மக்களுக்காக உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகள் என்பவற்றுக்கு துரிதமாக தீர்வுகள் மற்றும் தொழிற்பயிற்சி அமர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் அக்டோபர் 15, 16 இரு தினங்களில் காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற புடழஉயட குயசை 2022 மிகவும் பயனுள்ள நிகழ்;ச்சியாக சாதனை படைத்துள்ளது. இதற்கான ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தொழில்; மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இச்; சேவைகiளை நாடு முழுவதும் செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் புடழஉயட குயசை 2022  நடமாடும் சேவையின் முதற் கட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்தி முடிக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மற்றும் அதனோடு இணைந்த பல நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு காரணமாக அமைந்தது என்றும், அவர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாக  அமைச்சர் மேலும் தெரிவித்தார்.விஷேடமாக பெரும்பாலானோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற கனவை நனவாக்கிக் கொள்ள வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்பபு நிறுவனங்கள் பெற்றுக் கொடுத்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாக பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவும் புரிந்துணர்வின்மையை அகற்ற இந்நிறுவனங்கள் மூலம் பெற்றுக்  கொடுக்கப்பட்ட தகவல்களும் ஆலோசனைகளும் பெரும் உறுதுணையாக அமையும்  என தான் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  

 உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவு, புரிந்துணர்வு மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொடு;க்கப்படுவதோடு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை  காலியில் நடைபெற்ற புடழஉயட குயசை 2022  நடமாடும் சேவையில் பங்கு பற்றிய அனைவருக்கும் பெற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் வேலைவாய்ப்புகளைப் பெற பின்பற்றக் கூடிய வழிமுறைகள் பற்றி இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர் நிலையங்கள் மூலம்; பெற்றுக் கொடுக்கப்பட்டது. 

அத்தோடு ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரவேல் நாடுகளிலுள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களும் புடழஉயட குயசை 2022  நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றியவர்கள் பெற்றுக் கொண்டனர். அத்தோடு வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான தகைமைகளை பெற்றுக் கொள்ள அவசியமான பயிற்சி நெறிகள் பற்றிய தகவல்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள்  ,தொழிற்கல்வி ஆலோசனைச் சேவைகள், ஊழியர் சேமலாப நிதி  தொடர்பான பிரச்சினைகள் ,முறைப்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், மத்திய வங்கியின்  அங்கத்துவ கணக்குகள்  தொடர்பான சகல சேவைகளும் உள்ளிட்ட தொழில் மற்றும் வெளிநாhட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளும் இங்கு பெற்றுக் கொடு;க்கப்பட்டது. ‘வாழ்க்கைக்கு சுபீட்சமாhன வழி ‘ என்ற தலைப்பில் புடழஉயட குயசை 2022 இன் முதற்கட்டம் இவ்வாறு வெற்றிவாகை சூடியதுடன் இந்த நடமாடும் சேவையை நாடு முழுவதிற்கும் கொண்டு செல்ல  தேவையான அனைத்து ஒழுங்குகளும் எதிர்காலத்தில் தி;ட்டம்pடப்படும். தொழில்; மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின் ஆலோசனைப்படி புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தொழில் மற்;றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , அதனோடு இணைந்த நிறுவனங்களும் நடிவடிக்கைகளை மேற்கொள்ளும்.    

புடழஉயட குயசை 2022 வேலைத் திட்டத்தை மிக வெற்றிகரமாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பல வழிகளில் எமக்கு பக்கபலமாக இருந்து அனுசரணைகளைப் பெற்றுக் கொடுத்த மக்களுக்கும் பங்குபற்றிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.